search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு துப்பாக்கி"

    ஊத்தங்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாரம்பட்டி வனப்பகுதி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் தனிப்படை போலீசார் ஒரு வழக்கிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி வைத்து கொண்டு 2 வாலிபர்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சந்திராவரம் வேடியப்பன் நகரை சேர்ந்தவர் அய்யகண்ணு என்கிற சின்னசாமி (வயது 36), அவரது உறவினர் சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராஜகண்ணு (43) ஆகிய 2 பேரும் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.

    உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் நாட்டு துப்பாக்கி ஒன்றையும பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஊத்தங்கரை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். 

    சாராய விற்பனையை தடுக்க சென்றபோது நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மலைக் கிராமப்பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் வழக்கம் போல் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் எடுத்து கொண்டு மலையில் இருந்து கீழே இறங்கினர்.

    இதையடுத்து ஆயுதப்படை போலீஸ்காரர் அசோக்குமார் அந்த துப்பாக்கியை இயக்கி பார்த்து உள்ளார். அப்போது துப்பாக்கி இயங்கவில்லை.

    வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரிக்கரை அருகில் வரும்போது நாட்டு துப்பாக்கி அசோக்குமார் கையில் இருந்து தவறி விழுந்து வெடித்தது. அதில் இருந்து வெளியே வந்த குண்டு அசோக்குமாரின் காலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக்குமார் வலியால் அலறித் துடித்தார். படுகாயம் அடைந்த அசோக்குமாரை மீட்ட சக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம், அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று அழகாபுரம் காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு சென்றார்.

    அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கோவிந்தசாமி ஒரு மறைவான இடத்தில் பதுங்கினார்.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கோவிந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கையில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும், முயல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை அழகாபுரம் போலீசார் பறிமுதல் செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். வாலிபர் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×